பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்; உங்களுக்கான முக்கிய அறிவித்தல்

பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்; உங்களுக்கான முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை இவ் அமைப்பு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.