ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மெதிரிகிரிய பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேர் நேற்றைய தினம் (18) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

குறித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர், வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அரசியல் அமைப்பாளர் எம்.எம்.டொனல் இனை சந்தித்து குறித்த கட்சியில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2011 முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இதுவரை மெதிரிகிரிய பிரதேச சபையில் உள்ள உபாலி கஜநாயக மற்றும் குறித்த கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான திலக் செனவிரத்ன, காமினி சரத்சந்திர ஆகியோரும் ஜனாதிபதி உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மற்றும் உள்ளிட்ட குழுவினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்க சென்றதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிராமப்புற ஆதரவாளர்களை சிறிதேனும் மதிக்காது அவர்களது எதிர்காலம் தொடர்பில் கவலைகொள்ளாது தீர்மானம் எட்டியதாகவும் அது தொடர்பில் அதிக எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.