UNP 100 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசுகிறது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்படுவதாகத் குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிரதானக் கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.