டோனி மீது கொந்தளித்த சர்பராஸின் மனைவி

டோனி மீது கொந்தளித்த சர்பராஸின் மனைவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் டெஸ்ட் தொடர் மற்றும் இருபதுக்கு -20 ஓவர் அணியிலிருந்தும் சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பராஸ் அகமது இடம் பெறவில்லை, 32 வயதாகும் சர்பராஸ் அஹ்மட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகின.

என் கணவர் சர்பராஸ் அஹ்மட் ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது. இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. டோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா? டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா?. என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். எனது கணவர் ஒரு போராளி, மீண்டும் திரும்பி வருவார் என சர்பராஸ் அஹ்மட்டின் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அஹ்மட் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எனது கணவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதால், அவர் மனவேதனை அடையவில்லை, நம்பிக்கை இழந்து விடவில்லை. பாகிஸ்தான் சபை முடிவெடுத்துள்ளது. அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

இந்த முடிவை நாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம். இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும், அழுத்தமும் இன்றி விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார்.