தம்பியா, ஹலால் வார்த்தைகள் ஏன் தற்போது  சமூக வலைத்தளங்களில் இல்லை?

தம்பியா, ஹலால் வார்த்தைகள் ஏன் தற்போது சமூக வலைத்தளங்களில் இல்லை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் காணாமல் போய் விட்டதாக தேசிய மக்கள் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை சமூக வலைத்தளங்களில் தினமும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, 15 நிமிடத்திற்கு ஒரு முறை என முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை உருவாக்கும் பதிவுகளே காணப்பட்டன.

தம்பியா, ஹலால் என அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வேட்பாளரும், அவரை சுற்றி இருப்பவர்களுமே இதனை செய்து வந்தனர். அப்படியில்லை என்றால், ஓகஸ்ட் மாதத்துடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பதிவுகளை நிறுத்த வாய்ப்பில்லை.

மோசமான குடும்ப அணிகளின் திருடர்கள் இணைந்துள்ள அரசியல். அதேவேளை நாட்டுக்குள் ஒரே சட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும். அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.