கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 23 நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கிய பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை (கோப் அறிக்கை) இன்று(23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 23 நிறுவனங்கள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.