கொழும்பு – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி இரவு அவுக்கண உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்ட மீனகயா கடுகதி ரயில் இயந்திரத்தை மீள தடமேற்றும் பணிகள் காரணமாக, அந்த ரயில் சேவை மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.