கோப் குழு இன்று விசேடமாக கூடுகிறது

கோப் குழு இன்று விசேடமாக கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கி திறைசேரிமுறி தொடர்பில் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் இறுதி அறிக்கை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி தலைமையில் இன்று(03) விசேடமாகக் கூடவுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சகல கோப் குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.