லஹிரு விராஜ் கைது

லஹிரு விராஜ் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள களு சாகரகே என அறியப்படும் சமிந்த ரோஹன மஞ்சுவின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தேக நபர் ஒருவர் கடுவலை – கொத்தலாவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர் தினு என்ற லஹிரு விராஜ் என்ற 32 வயதுடையவர் ஆவார்.

கொத்தலாவலை – பட்டியாவத்தை – பின்லிந்த வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிந்து 70 லட்சம் பெறுமதியான 643 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.