அரச அதிகாரிகளுக்கு சந்தோஷமான தகவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15000 ரூபாவை விசேட கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றறிக்கையை எதிர்வரும் வாரம் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.