டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பை சூழவுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளில் பக்டீரியா விடுவிக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிகவடன தெரிவித்துள்ளார்.