அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு கட்டாரில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் இப்பேச்சுவார்த்தை நேற்று(08) ஆரம்பமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, தலிபான்களுடன் அமெரிக்கா கையெழுத்திடவிருந்த ஒப்பந்தம் இறுதி நேரத்தில் அமெரிக்காவினால் இரத்துச் செய்யப்பட்டு 3 மாதங்களின் பின் இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.