விக்கியை கைது செய்ய கோரி முறைப்பாடு

விக்கியை கைது செய்ய கோரி முறைப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை கைது செய்யக் கோரி பொலிஸ் தலமையதில் புதிய சிங்கள தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரியசாத் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை ஒரு பெளத்த நாடு இல்லை என்பதை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்த டான் பிரியசாத், இனங்களுக்கு இடையே விக்னேஸ்வரன் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவேண்டுமெனவும் தன் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.