ஒருநாள் நீர் வெட்டு அமுலுக்கு

ஒருநாள் நீர் வெட்டு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(17) காலை 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மஹர, கம்பஹா மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாதுவை, வஸ்கடுவ, களுத்துறை தெற்கு/வடக்கு, நாகொட, மக்கொன, பேருவளை, அளுத்கமை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு 11 1/2 மணி நேர நீட் வெட்டும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.