உயர் நீதிமன்ற நீதிபதி – யசந்தவின் பெயர் பரிந்துரை

உயர் நீதிமன்ற நீதிபதி – யசந்தவின் பெயர் பரிந்துரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மார்ச 28 ஆம் திகதி முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடமையாற்றி வருகின்றார்.

இதேவேளை,2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி காலஞ் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.