நிர்வாணமாக குளித்த ஹங்வெல்ல பக்தர்கள்; பெண்ணிற்கு பாதிப்பு

நிர்வாணமாக குளித்த ஹங்வெல்ல பக்தர்கள்; பெண்ணிற்கு பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாணிக்க கங்கையில் நிர்வாணமாக குளித்த ஹங்வெல்ல பக்தர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் பாரிய மோதல் ஏற்பட்டுள்ளது.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து வந்து நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.