நாடளாவிய ரீதியில் தரமான கடலுணவுகள் விற்பனை நிலையங்கள்

நாடளாவிய ரீதியில் தரமான கடலுணவுகள் விற்பனை நிலையங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மீண்டும் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.