சஜித் பிரேமதாஸ சிறிசேனவுக்கு அழைப்பு; அரசியல் தந்திரோபாயம்

சஜித் பிரேமதாஸ சிறிசேனவுக்கு அழைப்பு; அரசியல் தந்திரோபாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தம்முடன் இணையுமாறு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களை சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் வெற்றிகரமான பயணத்தை ஆரம்பிக்கலாம். சுதந்திரக்கட்சி மட்டுமல்ல அனைத்து சக்திகளுடனும் இணைந்து செயற்பட எமது அணி தயாராகவே இருக்கின்றது.” என்றும் சஜித் கூறினார்.

இதேவேளை, பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் மைத்திரி அணியை கடுமையாக விமர்சித்தும் வரும் நிலையிலேயே இவ்வாறான ஒரு கருத்தை சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது்

குறித்த கருத்தை அரசியல் விற்பன்னர்கள் சஜித்தின் அரசியல் தந்திரோபாயம் என தெரிவிக்கின்றனர்.

இக் கருத்துக்கான பதிலை பலரும் எதிர்பார்தவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.