பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது இராஜினாமாக கடிதத்தினை அந்நாட்டு மன்னரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட்டு தனது முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வராம் முதல் மகாதீர் மொஹமட்டுக்கு எதிராக அரசியல் ரீதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.