அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப கையிருப்பில்

அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப கையிருப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது,

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை இரத்து செய்யவும் வரையறைக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலத்தில் இலங்கையில் வலுவான உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டே அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.