பிரித்தானிய பிரதமர் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
My best wishes to PM @BorisJohnson for a speedy recovery. Our prayers are with you and the people of #UK during these trying times pic.twitter.com/zogLvqqEsV
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 7, 2020
இதேவேளை, சர்வதேச தலைவர்கள் பலரும் பிரித்தானிய பிரதமர் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.