ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை(09) காலை 6 மணிக்கு தளர்த்தபட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்ந்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.