நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் 19 பேர் கடற்படையினர்

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் 19 பேர் கடற்படையினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம்(23) அடையாளம் காணப்பட்ட 21 கொரோனா நோயாளர்களுள் கடற்படையினர் 19 பேர் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடற்படையினர் 19 பேர் உள்ளிட்ட டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகைதந்துள்ள இருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் தொற்றுக்கள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 660 ஆக காணப்படுகின்றது.