இந்தியா உட்பட மேலும் 11 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

இந்தியா உட்பட மேலும் 11 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா உட்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவியதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தி பிரதமர் ஹின் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் கொரோனா பரவலை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளார்.