ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவுக்கு செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.