நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(12) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 673 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1196 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.