தொழிற்தகைமை பாடநெறியிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தொழிற்தகைமை பாடநெறியிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர்தரத்தின் தேசிய தொழிற்தகைமை பாடநெறியிற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன்மூலம் நன்மையடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் தரம் 12 இற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.