“கொரோனா” மாபியாவில் பாகிஸ்தான் அணி : அதிருப்தியில் வீரர்கள்

“கொரோனா” மாபியாவில் பாகிஸ்தான் அணி : அதிருப்தியில் வீரர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’என முடிவு வந்துள்ளது கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் சரச்சையாக உள்ளது எனலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக எதிர்வரும் 28ம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறது. இதையொட்டி பாகிஸ்தான் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் சகலதுறை ஆட்டக்காரர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி துடுப்பாட்ட பஹார் ஜமான் உள்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று முன்தினம்(23) தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சகலதுறை ஆட்டக்காரரான 39 வயதான முகமது ஹபீஸ் தனது திருப்திக்காக லாகூரில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.

இதே போல் அவரது குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனை சரியானது தானா? என்ற குழப்பம் மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எது எப்படி என்றாலும் இன்று அனைத்து வீரர்களுக்கும் மறுபடியும் கொரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கேள்வியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இவை வேண்டுமென்றே செய்யப்படும் சூழ்ச்சியா எனவும் ரசிகர்கள் தொடர்ந்தும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.