வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்காலத் தடை 

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்காலத் தடை 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் முன்னெடுப்படும் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கிற்கே இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.