இந்த அரசுக்கு 2/3 பெரும்பான்மையினை வழங்க வேண்டாம்

இந்த அரசுக்கு 2/3 பெரும்பான்மையினை வழங்க வேண்டாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாள் அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் இலகுவாக பெரும்பான்மையினை பெற்றுக் கொள்ள முடியாது என அபே ஜன பல கட்சியின் வேட்பாளர் வண.அதுரலிய ரதன தேரர் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரம் தனது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் கோரினாலும் மூன்றில் இரண்டினை பெற்று இந்நாள் அரசாங்கம் நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள் என இன்னும் விரிவுபடுத்தவில்லை என்றும் தேரர் தெரிவித்திருந்தார்.