உங்களது வாக்குகள் தான் முக்கியம் – முஸ்லிம்களிடம் கோட்டா தெரிவிப்பு

உங்களது வாக்குகள் தான் முக்கியம் – முஸ்லிம்களிடம் கோட்டா தெரிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை ) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் (05) பொலன்னறுவை மாவட்டத்தில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களது வெற்றியினை உறுதி செய்யும் முகமாக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தம்பல பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை சந்திக்கையில் முஸ்லிம் மக்கள் “ரொஷான் ரணசிங்ஹ எங்களுக்கு ஒரு உறுதுணை” எனத் தெரிவித்திருந்தனர். அதற்கு ஜனாதிபதி தெரிவிக்கையில், “நீங்கள் வாக்களிக்க வேண்டும். அது ஒரு விஷயமே இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.