குழந்தை, மனைவியினை கடலில் தள்ளிவிட்டு கணவன் தலைமறைவு

குழந்தை, மனைவியினை கடலில் தள்ளிவிட்டு கணவன் தலைமறைவு

கொஸ்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையினை கடலில் தள்ளிய சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நபர் ஒருவர் தனது மனைவி(34) மற்றும் குழந்தையை(1வருட 11மாத) 10 கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்து நேற்று இரவு 10 மணியளவில் கடலில் கற்பாறை ஒன்றின் மீது ஏறி மனைவியையும் குழந்தையும் தள்ளி விட்டுள்ளதாகவும், அவரது மனைவி கரைக்கு நீந்தி வந்து உயிரை காப்பாற்றி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த குழந்தை இதுவரையிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

காப்பாற்றப்பட்ட மனைவி சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவி மற்றும் குழந்தையை கடலில் தள்ளி விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

(riz)