வைத்தியசாலையில் தீ – கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி

வைத்தியசாலையில் தீ – கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து இன்று(06) அதிகாலையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.