அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான் : ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியல்

அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான் : ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பாராளுமன்றுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளாக சமகால வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த 09 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 6 853 693 வாக்குகளைப் பெற்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அதுரலிய ரதன தேரரின் அபே ஜன பலய கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஒரு இடம் கிடைத்துள்ளது.

இந்த பதவிக்கு கலகொட அத்தே ஞானசார நியமிக்கப்படலாம் என்றும், அவர் பாராளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.