சஜின் வாஸுக்கு பிணை அனுமதி

சஜின் வாஸுக்கு பிணை அனுமதி

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (23) அனுமதியளித்துள்ளது.

இவர், 10 மில்லியன் ரொக்கப்பிணையிலும்  40 மில்லியன் ஆட்பிணையிலும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 22 வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாத காலமாக முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.