CSK வீரர்களின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது
(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு அமீரகம்) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த சென்னை அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு 3-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டபோது இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ஒரு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அதிலும் வீரர்களுக்கு நெகட்டிவ் என வந்தால், வீரர்கள் பயிற்சிக்கு தயாராகலாம் என தெரிவிக்கப்படுகின்றன.