பிரேமலால் ஜயசேகர பதவிப் பிரமாணம் [UPDATE]

பிரேமலால் ஜயசேகர பதவிப் பிரமாணம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரண தண்டனை கைதியாக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

———————————————————–[UPDATE 11.50 AM]

பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு [UPDATE]

இன்றைய தினம்(08) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.

———————————————————–[UPDATE 08.44 AM]

இன்று ஒன்றுகூடவுள்ள பாராளுமன்றம்

விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம்(08) பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(07) அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது.

இதேவேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடவுள்ளனர்.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது