செல்லம்மாவுடன் அனிருத் காதல்

செல்லம்மாவுடன் அனிருத் காதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – முன்னணி இசையமைப்பாளரான அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இந்த நிலையில், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கினார். அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.

அனிருத், ஜோனிடா காந்தி