ஐபிஎல் தொடரில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 13 ஆவது சீசனில் அமெரிக்காவைச் சேர்ந்த அலி கான் என்ற வேகப்பந்து வீச்சாளர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார்.

இந்தியாவில் கொரோனா முடக்கத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் இருபதுக்கு 20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் முதலாக அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார்.

கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னி காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக அலிகான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் லீக் போட்டிகளில் பொல்லார்ட் தலைமையிலான அணியில் விளையாடினார். மேலும் 13 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் அமெரிக்க வீரராக அலிகான் சேர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.