உகண்டாவில் 200ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

உகண்டாவில் 200ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | உகண்டா) – கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தப்பிச் சென்ற கைதிகள் 15 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் தப்பியோடியதாகவும் கைதிகளை கைது செய்யும் நோக்கில் இராணுவம் மற்றும் சிறை அதிகாரிகளால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.