மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமை குறித்த விசாரணைகளுக்காகவே இன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலரும் இதன்போது வாக்குமூலமளிக்க வந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.