கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று(29) பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் குறித்த சிசுவினை பார்வையிட்ட அனுராதபுரம் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.