பாகிஸ்தான் பாடசாலையில் குண்டு வெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

பாகிஸ்தான் பாடசாலையில் குண்டு வெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தானில் பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.