கொரோனா தொற்றுக்குள்ளான ‘பிபா’ தலைவர்

கொரோனா தொற்றுக்குள்ளான ‘பிபா’ தலைவர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபா நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இன்பான்டினோ தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ அறிவுறுத்தியுள்ளது.