மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி

மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9,081 ஆக உயர்வடைந்துள்ளது.