வியட்நாமை சூறையாடிய சூறாவளி – 136 பேர் பலி

வியட்நாமை சூறையாடிய சூறாவளி – 136 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணம் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இந்த சூறாவளியினால் 56,000 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.