மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி க்ளேடியேடர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் நோக்கி செல்ல வேண்டியுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சஹீட் அப்ரிடி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பாகிஸ்தானில் தமது பணிகளை நிறைவு செய்தவுடன் மீண்டும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் இணைந்து கொள்ளவுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.