நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு தொழில் அதிபர் ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜனவரியில் திருமணம் நடக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.