உணவு பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை

உணவு பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய 10 உணவு பொருட்களுக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலை அமுலாகுமென, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சதொச மற்றும் கிவ் சொப் நிலையங்கள் ஊடாக இவ் உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரிசி, சீனி, மா, உப்பு, பருப்பு, டின்மீன், நெத்தலி, உருளைக்கிழங்கு, முட்டை, கோழி இறைச்சி என்பவற்றை இவ்வாறு நிர்ணய விலைக்கு வழங்கவுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.