இராணுவப் பயிற்சி தொடர்பிலான யோசனை

இராணுவப் பயிற்சி தொடர்பிலான யோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்று தொடர்பான யோசனையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உலகின் சில நாடுகள் சிறந்த முடிவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.